யாழ்.மாவட்டத்தில் 3 கொரோனா சிகிச்சை நிலையங்கள்..! யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரி, நாவற்குழி அரச களஞ்சியம் இராணுவ கட்டுப்பாட்டில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 3 கொரோனா சிகிச்சை நிலையங்கள்..! யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரி, நாவற்குழி அரச களஞ்சியம் இராணுவ கட்டுப்பாட்டில்..

யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரி, நாவற்குழி அரச களஞ்சியம் மற்றும் வசாவிளானில் உள்ள கட்டிடம் ஒன்றும் கொரோனா சிகிச்சை நிலையம் அமைப்பதற்காக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் 3 சிகிச்சை நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் யாழ்.மாவட்ட செயலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நாவற்குழி அரச களஞ்சியத்தில் 300 நோயாளர் படுக்கைகள் கொண்ட சிகிச்சை நிலையம் அமைக்கப்படவுள்ளது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் வசாவிளான் கட்டடத்தில் இடவசதிக்கு அமைவாக நோயாளர் படுக்கைகளை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அரச களஞ்சியம் மற்றும் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப நிறுவனம் என்பவற்றில் மலசல கூடங்கள் உள்ளிட்டவற்றை அமைக்கும் வகையில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு