யாழ்.கைதடியில் இ.போ.ச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது..! தெய்வாதீனமாக பயணிகள் சேதமின்றி தப்பினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடியில் இ.போ.ச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது..! தெய்வாதீனமாக பயணிகள் சேதமின்றி தப்பினர்..

யாழ்.கைதடி பகுதியில் இ.போ.ச காரைநகர் சாலைக்கு சொந்தமா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவரும் காயங்களின்றி தப்பியுள்ளனர். கைதடி பாலத்துக்கும் - பிள்ளையார் கோயிலுக்கும் இடையில் ஏ-9 வீதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது.

காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்து ஏ-9 கண்டி வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கு பயணித்துள்ளது. கைதடிப் பாலத்தைக் கடக்கும் போது வேகக் கட்டுப்பாட்டையிழந்த பேருந்து வீதியைவிட்டு விலகிச் சென்றுள்ளது.

பேருந்து தடுமாறிப் பயணித்ததால் எதிரே பயணித்த வாகனங்கள் சடுதியாக பிறேக் அடித்ததால் பின்னே சென்ற டிப்பர் வீதியிலிருந்து விலக முற்பட்ட போதும் சாரதியால் கட்டுப்படுத்தப்பட்டது.

கடும் மழை பொழிந்து கொண்டிருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து பேருந்தில் பயணித்தவர்கள் மற்றொரு பேருந்தில் தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு