சீனா விண்கலத்தின் பெரும் பகுதி இந்திய கடலில் வீழ்ந்து மூழ்கியது!!

ஆசிரியர் - Editor II
சீனா விண்கலத்தின் பெரும் பகுதி இந்திய கடலில் வீழ்ந்து மூழ்கியது!!

சீனா விண்ணுக்கு அனுப்பிய விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் பூமி நோக்கி திரும்பி இதன் பெரும் பாகம் ஒன்று மாலத்தீவுக்கு மேற்கே இந்தியப் பெருங்கடலில் விழுந்தது மூழ்கியுள்ளது. 

சீனா விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில்  தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்காக கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதி லோங் மார்ச் - 5பி ரொக்கெட் மூலம் கட்டுமான விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்தி  ரொக்கெட், மீண்டும் பூமிக்கு திரும்பியது.

அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ரொக்கெட் இழந்தது. எனவே எந்த நேரமும் அந்த ராக்கெட் பாகம் பூமியில் விழும் சூழல் ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டது.

இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கெட் வளிமண்டலத்திற்குள் நுழைந்து பூமியை நோக்கி வேகமாக வரத் தொடங்கியது. 18 டொன் எடை கொண்ட ரொக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்றும், எஞ்சிய பாகம் கடலில் விழும் என்றும் சீனா கூறியிருந்தது. அதன்படி, ரொக்கெட்டின் எஞ்சிய பாகம் இன்று மாலைதிவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. விண்வெளி குறித்து ஆய்வு செய்து வரும் ஸ்பேஸ் டிராக் முகமையும் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு