பூமியை நோக்கி மிக வேகமாக வரும் சீனா ராக்கெட்!! -இந்திய கடல் பகுதியில் இன்று விழும்-

ஆசிரியர் - Editor II
பூமியை நோக்கி மிக வேகமாக வரும் சீனா ராக்கெட்!! -இந்திய கடல் பகுதியில் இன்று விழும்-

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமியில் விழவுள்ள ராக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்றும், எஞ்சிய பாகம் கடலில் விழும் என்றும் சீனா தெரிவித்துள்ளது. 

விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் சீனாவின் முயற்ச்சியில் கடந்த மாதம் 29 ஆம் திகதி லாங் மார்ச்-5பி ராக்கெட் மூலம் கட்டுமான விண்கலத்தை அனுப்பியது. 

குறித்த விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்திய ராக்கெட், மீண்டும் பூமிக்கு திரும்பியது.

இதன் போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ராக்கெட் இழந்தது. எனவே எந்த நேரமும் அந்த ராக்கெட் பாகம் பூமியில் விழும் சூழல் ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் அச்சம் ஏற்பட்டது.

இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட் வளிமண்டலத்திற்குள் நுழைந்து பூமியை நோக்கி வேகமாக வரத் தொடங்கியது. 18 டன் எடை கொண்ட ராக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்றும், எஞ்சிய பாகம் கடலில் விழும் என்றும் சீனா தெரிவித்துள்ளது. 

அதன்படி, ராக்கெட்டின் எஞ்சிய பாகம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலத்திவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக சீனா மேலும் தகவல் தெரிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு