திருமண மண்டபத்தை தருகின்றேன்!! -வைரமுத்து அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
திருமண மண்டபத்தை தருகின்றேன்!! -வைரமுத்து அறிவிப்பு-

கொரோனா நோயாளிகள் அதிகரித்துவரும் நிலையில் திருமண மண்டபங்களை வைத்தியசாலையாக மாற்றுவதற்கு முடிவெடுத்தால் தனது திருமண மண்டபத்தை கொடுத்து உதவிட தயார் என்று கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அனைத்து அரசு மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாபவர்களை அனுமதித்து சிகிச்சை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் பல அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருமண மண்டபங்களை வைத்தியசாலைகளாக மாற்றுவதற்கு முடிவெடுத்தால் தனது திருமண மண்டபத்தை கொடுத்து உதவிட தயார் என்று வைரமுத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் அவர் பதவிவொன்றினையும் இட்டுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு