கொரோனாவால் ஏற்பட்ட மிகப்பெரிய ஆபத்து கட்டம்!! -சிகிச்சையால் உயிர் பிழைத்த அருண் பாண்டியன்-

ஆசிரியர் - Editor II
கொரோனாவால் ஏற்பட்ட மிகப்பெரிய ஆபத்து கட்டம்!! -சிகிச்சையால் உயிர் பிழைத்த அருண் பாண்டியன்-

தமிழ் சினிமா துறையில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் அருண் பாண்டியன், கொரோனாவால் ஏற்பட்ட மிகப்பெரிய கட்டத்தை தாண்டி உயிர் பிழைத்துள்ளார். 

அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருக்கும் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். 7 நாள்களுக்கு பின் திடீரென அவருக்கு நெஞ்சு வலி வந்திருக்கிறது.

உடனே மதுரையில் ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டதாலும், அவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என்பதனாலும் கூடுதல் கவனம் எடுத்து ஆஞ்ஜியோப்ளாஸ்டி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவர் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி உள்ளார் என்றும், தற்போது அவர் நலமாக உள்ளார் என்றும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு