போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியை மோதிய வாகன சாரதி கைது-அம்பாறையில் சம்பவம்

ஆசிரியர் - Editor III
போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியை மோதிய வாகன சாரதி கைது-அம்பாறையில் சம்பவம்

கடமையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிஸார் மீது வேகமாக வந்த கப் வாகனம் மோதியதில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள்  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கப் வாகன சாரதி கைதாகியுள்ளார்.

இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை(7) மாலை  அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மண்டல மகா விஹாரைக்கு அண்மையில்  இடம்பெற்றுள்ளதுடன் கப் வாகனம் மோதியதில்  பொலிஸாரின் 600 சிசி மோட்டார் சைக்கிள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இதன் போது குறித்த விபத்தில் அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி காயமடைந்துள்ளதுடன் இவ்விபத்தினை ஏற்படுத்திய    காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் காயமடைந்த போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு