10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை முழு ஊரடங்கு!! -தமிழக அரசு அதிரடி அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை முழு ஊரடங்கு!! -தமிழக அரசு அதிரடி அறிவிப்பு-

தமிழகத்தில் கட்டுக்கடங்காமல் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாளை மறுதினம் 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 

கொரோனா பரவலை தடுக்க நாளை மறுதினம் 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 

தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு மதுபான விற்பனை நிலையங்கள் இயங்காது,  உணவகங்களில் பார்சல் வழங்க அனுமதி, காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும், அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது என்றுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு