இந்தியாவை விடாது துரத்தும் கொரோனா!! -ஒரு நாளில் புதிதாக 4,01,078 பேருக்கு தொற்று-

ஆசிரியர் - Editor II
இந்தியாவை விடாது துரத்தும் கொரோனா!! -ஒரு நாளில் புதிதாக 4,01,078 பேருக்கு தொற்று-

இந்தியாவில் 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 4,01,078 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 4 இலட்சம் கடந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:- இன்று காலை 6 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் 4 இலட்சத்து ஓராயிரத்து 78 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 18 இலட்சத்து 92 ஆயிரத்து 676 ஆக உயர்வடைந்து உள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான 4,187 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,38,270 ஆக உயர்ந்து உள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு