கொரோனாவால் வேலையிழந்த திரையுலக தொழிலாளர்கள்!! -25,000 பேருக்கு நிதியுதவி செய்யும் சல்மான் கான்-

ஆசிரியர் - Editor II
கொரோனாவால் வேலையிழந்த திரையுலக தொழிலாளர்கள்!! -25,000 பேருக்கு நிதியுதவி செய்யும் சல்மான் கான்-

இந்தி திரையுலகில் பணியாற்றிவந்த தொழிலாளர்களில் கொரோனாவால் வேலையிழந்த 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நடிகர் சல்மான் கான் நிதியுதவி வழங்க உள்ளார். 

இந்தியாவில் கொரோனாவின் 2 ஆவது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதனால் திரையுலகமும் இழப்புகளை சந்தித்து வருகிறது. 

இந்நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான், கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து வேலையின்றி உள்ள இந்தி திரையுலகை சேர்ந்த 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்து அவர்களுக்கு உதவ முடிவு செய்து உள்ளார்.

இதன்படி, தினக்கூலி அடிப்படையில் சம்பளம் பெறும் 25 ஆயிரம் தொழிலாளர்களின் கணக்குகளுக்கு தலா 1,500 ரூபா அனுப்பிவைக்க உள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு