யாழ்.பருத்தித்துறையில் சுகாதார பிரிவு அதிரடி! சுகாதார நடைமுறைகளை மீறிய இ.போ.ச சாரதி உட்பட 13 பேருக்கு தனிமைப்படுத்தல்...

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் சுகாதார பிரிவு அதிரடி! சுகாதார நடைமுறைகளை மீறிய இ.போ.ச சாரதி உட்பட 13 பேருக்கு தனிமைப்படுத்தல்...

யாழ்.பருத்தித்துறையில் சுகாதார விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 13 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார பாதுகாப்பு விதிகள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்ட கோவில் நிர்வாகி, பேருந்து சாரதி மற்றும் வர்த்தகர்கள் உட்பட 13 பேரை பருத்தித்துறை பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கட்டாய சுயதனிமைப்படுத்தலில் நேற்று வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டுள்ளனர்.

கொவிட் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்ட கோவில் நிர்வாகத்துக்கு பொறுப்பானவரும், முகக்கவசமின்றி பேரூந்தை ஓட்டிய இலங்கை போக்குவரத்து  பருத்தித்துறைச்சாலை சாரதியும், 

முகக்கவசமின்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தக நிலைய ஊழியர்களும் உட்பட 13 பேர் பருத்தித்துறை பொதுச்சுகாதார பரிசோதகர்களால் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு