யாழ்.நெடுந்தீவில் கடற்படை வாகனம் மோதியதில பாடசாலை மாணவன் படுகாயம்..! பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குடும்பத்தார் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவில் கடற்படை வாகனம் மோதியதில பாடசாலை மாணவன் படுகாயம்..! பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என குடும்பத்தார் குற்றச்சாட்டு..

யாழ்.நெடுந்தீவில் கடற்படையின் தண்ணி பவுசர் மோதியதில் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவன் படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த மாதம் 24 ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த மாணவன் மீது கடற்படையினரது தண்ணீர் பவுசர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. 

நெடுந்தீவு இறங்குதுறைக்கு அண்மையில் உள்ள கொத்தியார் வீதியில் இடம்பெற்ற இவ் விபத்து சம்பவத்தில் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் அதே பகுதியைச் சேர்ந்த ந.கவிப்பிரியன் (வயது-15) என்ற மாணவனே படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக படகு மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. விபத்தில் படுகாயமடைந்த மாணவன் கோமா நிலையிலேயே தொடர்ந்து காணப்படுவதாக 

குடும்பத்தார் தெரிவித்துள்ளதுடன் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ள போதிலும் விபத்தை ஏற்படுத்திய கடற்படையினரது தண்ணீர் பவுசரையோ, 

அதனை செலுத்திய கடற்படையினரையோ இதுவரை கைது செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு