குணச்சித்திர நடிகர் பாண்டு கொரோனாவல் இன்று காலமானார்!!

ஆசிரியர் - Editor II
குணச்சித்திர நடிகர் பாண்டு கொரோனாவல் இன்று காலமானார்!!

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான பாண்டு தனது 74 ஆவது வயதில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். 

அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பாண்டுவும் அவரது மனைவி குமுதாவும் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். 

அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தபோது, இன்று வியாழக்கிழமை அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி குமுதாவுக்கு வைத்தியசாலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. 

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு