யாழ்.போதனா வைத்தியசாலையில் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று..! மரண சடங்கில் பதற்றமான நிலை..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று..! மரண சடங்கில் பதற்றமான நிலை..

யாழ்.போதனா வைத்தியசாலையில் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறிப்பட்டதை தொடர்ந்து சுகாதார பிரிவினர் மரண சடங்கை சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நடத்துமாறு பணித்ததால் பதற்றமான நிலையேற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.நகரைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உடனடியாக அன்டிஜன் பரிசோதனை செய்த போது கொரோனா வைரஸ் தொற்று இல்லை என அறியப்பட்டுள்ளது. எனினும் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. முதியவர் அன்றைய தினமே 7ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் அங்கிருந்து 9ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை முற்பகல் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் சடலம் நேற்று நண்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் நேற்று மாலை வெளியாகிய பிசிஆர் பரிசோதனை முடிவில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதனால் முதியவரின் உடலை சுகாதார முறைப்படி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்பட்டுள்ளது.இதனால் இறுதிச் சடங்கில் பதற்றமான நிலை காணப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு