யாழ். கரவெட்டியில் முக கவசம் அணியாத 8 வர்த்தகர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல்..!

ஆசிரியர் - Editor I
யாழ். கரவெட்டியில் முக கவசம் அணியாத 8 வர்த்தகர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல்..!

யாழ்.கரவெட்டி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 8 வர்த்தகர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று கரவெட்டி சுகாதார பணிமனை வைத்தியர் செந்தூரன் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நெல்லியடி வர்த்தக நிலையங்கள் பார்வையிடப்பட்டது. 

இதில் 8 வர்த்தகர்கள் முறையாக முகக் கவசம் அணியாமல் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. இதனையடுத்தே அவர்கள் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு