இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணினால் கைது..! அனைத்து அனுமதிகளுக்கும் நிரந்தர தடை, சலுகைகள் இரத்து..

ஆசிரியர் - Editor I
இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணினால் கைது..! அனைத்து அனுமதிகளுக்கும் நிரந்தர தடை, சலுகைகள் இரத்து..

நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஆட்களை படகு மூலம் அழைத்துவருவது, இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை பேணுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்திருக்கின்றது. 

நாட்டில் கொரோனா தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் கடல்பகுதியின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளர்.

இந்நிலையில், கடல் எல்லையின் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு வெளிநாட்டவர்களுக்கு உதவி செய்யும் மீனவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என கடற்தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான அனுமதிப்பத்திரமும் இரத்துச் செய்யப்படும் எனவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு