திடீரென ஓய்வு அறிவித்த திசாரா பெரேரா!!

ஆசிரியர் - Editor II
திடீரென ஓய்வு அறிவித்த திசாரா பெரேரா!!

6 பந்தில் 6 சிக்சர்கள் விளாசிய இலங்கை வீரர் திசாரா பேரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு மற்றும் அதிரடி துடுப்பாட்டம் என அனைத்திலும் கலக்கிய திசாரா பெரேரா தனது 32 ஆவது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இளம் வீரர்களுக்கு வழி விடவும், அதிக திறமை கொண்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்திடவும், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆறு பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து சாதனைப் படைத்தவர். 11 வருடம் கிரிக்கெட் வாழ்க்கையில் 166 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2338  ஓட்டங்களையும், 175 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். மேலும் 84 ரி-20 போட்டிகளில் 1204 ஓட்டங்களையும், 51 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு