நியமன கடிதம் பெற காத்திருந்த சுகாதார தொண்டர்கள்..! அப்படி ஒரு அறிவிப்பும் வரவில்லை என்கிறது ஆளுநர் செயலகம்..

ஆசிரியர் - Editor I
நியமன கடிதம் பெற காத்திருந்த சுகாதார தொண்டர்கள்..! அப்படி ஒரு அறிவிப்பும் வரவில்லை என்கிறது ஆளுநர் செயலகம்..

வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஊடாக நியமனம் வழங்கப்படவுள்ளதாக தமக்கு தகவல்வ ழங்கப்பட்டதாக கூறி வடமாகாண சுகாதார தொண்டர்கள் ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று காலை கூடியிருந்தபோதும் அவ்வாறான அறிவித்தல் ஆளுநர் செலயத்திற்கு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. 

தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்ககோரி ஆளுநர் அலுவலகம் முன்பாக சுகாதார தொண்டர்கள் கடந்த பல நாட்களாக தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திவரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் அலுவலகம் ஊடாக நியமன கடிதங்கள் இன்று காலை வழங்கப்படவுள்ளதாக 

ஜனாதிபதி செயலகம் ஊடாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக சுகாதார தொண்டர்கள் கூறுவதுடன் நியமனம் பெறுவதற்காக இன்று காலை கூடியிருந்தனர். எனினும் நியமனம் வழங்கல் தொடர்பான அறிவிப்பு எதுவும் தமக்கு கிடைக்கவில்லை. என ஆளுநர் செலயகம் கூறியுள்ளதாக கூறிய சுகாதார தொண்டர்கள், 

மழைக்கும் மத்தியில் ஆளுநர் செயலகம் முன்பாக காத்திருந்தனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு