யாழ்.காங்கேசன்துறையில் புத்தர் சிலை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது..! பின்னணி இதுதானாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறையில் புத்தர் சிலை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது..! பின்னணி இதுதானாம்..

யாழ்.காங்கேசன்துறை பகுதியில் புத்தர் சிலை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கின்றான். 

கீரிமலை நல்லிணக்க புரம் பகுதிக்கு அண்மையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் இருந்த புத்தர் சிலையை உடைத்த இளைஞன் 

அப்பகுதியில் காணப்பட்ட பழைய இரும்புகளையும் சேகரித்துள்ளார். புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிந்த கொண்ட காங்கேசன்துறை பொலிஸார் 

மற்றும் இராணுவத்தினர் அப்பகுதிக்கு விரைந்து சிலையை உடைத்த இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞன் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு 

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு