யாழ்.வரணியில் வாள்வெட்டு குழுக்கள் மோதல்..! ஒருவர் படுகாயம், சம்பவ இடத்தில் பதற்றம் பொலிஸார் விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வரணியில் வாள்வெட்டு குழுக்கள் மோதல்..! ஒருவர் படுகாயம், சம்பவ இடத்தில் பதற்றம் பொலிஸார் விசாரணை..

யாழ்.தென்மராட்சி - வரணி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மாலை வரணி சந்தை பகுதியில் குறித்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் வாள்வெட்டில் சிக்கிய ஒருவர் படுகாயம் அடைந்திருந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவரை 

மீட்டு சாவகச்சேரி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு