யாழ்.வடமராட்சி - துன்னாலையில் 23 பேருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்..! எச்சரிக்கையை மீறி கிரிக்கெட் பயிற்சி..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி - துன்னாலையில் 23 பேருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்..! எச்சரிக்கையை மீறி கிரிக்கெட் பயிற்சி..

யாழ்.வடமராட்சி - துன்னாலை பகுதியில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் 23 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

குறித்த பகுதியில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி கிரிக்கெட் பயறிச்சி நடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், 

பயிற்சியாளரை கைது செய்ததுடன் எச்சரிக்கை செய்து விடுவித்ததுடன் கட்டாய தனிமைப்படுத்தலில் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மேலும் அவருடன் பயிற்சியில் பங்கெடுத்தவர்கள் அடங்கலாக 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். கடந்த சில தினங்களாக குறித்த பயிற்சி இடம்பெற்றுவந்த நிலையில், 

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீற வேண்டாம். என அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் அறிவுறுத்தியிருந்தார். ஆனாலும் அறிவுறுத்தலை மீறி

பயிற்சி நடத்தப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு