வடக்கில் தொடரும் தீவிரமான கொரோனா அபாயம்..! இன்றும் 25 பேருக்கு கொரோனா தொற்று, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற சென்றபோது பலருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
வடக்கில் தொடரும் தீவிரமான கொரோனா அபாயம்..! இன்றும் 25 பேருக்கு கொரோனா தொற்று, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற சென்றபோது பலருக்கு தொற்று உறுதி..

யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான 7 போில் ஒருவர் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர். மேலும் 4 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் என்பதுடன், 

மேலும் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தவர் எனவும், பருத்தித்துறையில் ஒருவருக்கும் தொற்று உறுதியானது. மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம், மல்லாவி, மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைகளில்

3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மன்னார் பொது வைத்தியசாலையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர், வவுனியா மாவட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கும், 

பூவரசங்குளம் வைத்தியசாலையில் ஒருவருக்கும், வவுனியா மரக்கறி சந்தையில் நடத்தப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேருக்கும், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறவந்த 2 பேருக்குமாக

வடக்கில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு