அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!!

சென்னையை சேர்ந்த அஸ்வின் நடந்து கொண்டிருக்கும் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகாக விளையாடி வந்தார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகினார். கொரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், விலகுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். 

எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், சிறியவர்கள் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் இருந்து 5ற்க்கும் மேற்பட்ட வீரர்கள் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு