20ற்கும் மேற்பட்ட வீடுகளில் உரிமையாளர்கள் இல்லை..! சமூக விரோதிகள் சுதந்திரமாக நடமாட்டம், யாழ்.நாவற்குழியில் மக்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
20ற்கும் மேற்பட்ட வீடுகளில் உரிமையாளர்கள் இல்லை..! சமூக விரோதிகள் சுதந்திரமாக நடமாட்டம், யாழ்.நாவற்குழியில் மக்கள் போராட்டம்..

யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட நாவற்குழி ஐயனார் கோவிலடி முத்தமிழ் கிராம வீட்டுத் திட்டத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளில் உரியவர்கள் இல்லாத காரணத்தினால் சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

2017 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 250 வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்ட கிராமத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் உரியவர்கள் வசிப்பதில்லை.

இதன் காரணமாக குறித்த வீடுகளில் சமூக வரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் சுதந்திரமாக  குறித்த வீடுகளை பயன்படுத்தி வருவதால் தாம்  அச்சத்துடன் வாழ்வதாகத் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தினால் வீடுகள் வழங்கப்பட்டு 5 வருடங்கள் கடந்தும் தமக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இதுவரை கிடைக்கவில்லை 

எமது பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய இதுவரை எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு