யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா அபாயம்..! 12 பேருக்கு இன்றும் தொற்று, விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் கொரோனா அபாயம்..! 12 பேருக்கு இன்றும் தொற்று, விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 12 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், இன்றைய தினம் 666 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கும், யாழ்.சிறைச்சாலையில் இருவருக்கும், 

சண்டிலிப்பாயில் 3 பேருக்கும், யாழ்.மாநகரில் இருவருக்கும், கரவெட்டியில் ஒருவருக்கும், வேலணையில் ஒருவருக்கும், கோப்பாயில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவருக்கும், 

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தல் நிலையத்தை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு