யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றிருந்த 4 பேருக்கு தொற்று உறுதி..! விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா மாவட்டங்களில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றிருந்த 4 பேருக்கு தொற்று உறுதி..! விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் இருவர் உட்பட வடக்கில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி 499 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் இருவருக்கும், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் சாவகச்சோி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறவந்த ஒருவருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிக்சை பெற்றுவந்த இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மன்னார் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறவந்த ஒருவருக்கும், வவுனியா - பூவரசங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெறவந்திருந்த ஒருவருக்கும் தொற்று உறுதியானதாக

பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு