சுகாதார நடைமுறைகளை மீறும் எவர் மீதும் உச்சபட்ச நடவடிக்கையை எடுங்கள்..! வடமாகாண ஆளுநர் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு பணிப்பு..

ஆசிரியர் - Editor I
சுகாதார நடைமுறைகளை மீறும் எவர் மீதும் உச்சபட்ச நடவடிக்கையை எடுங்கள்..! வடமாகாண ஆளுநர் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு பணிப்பு..

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறுவோர் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார பிரிவினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினருக்கு வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் பணிப்புரை வழங்கியுள்ளனர். 

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றிருந்தது. கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

நேற்று கிடைத்த அறிக்கையின்படி கொரோனா பரம்பல் வடக்கில் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்க அதிபர்களுடன் மீளாய்வுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளும் 

அவற்றை மீறுபவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும்படியும் அறுவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்.  என ஆளுநர் மேலும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு