யாழ்.வடமராட்சி கிழக்கில் சீன எழுத்துக்களுடன் கூடிய கட்டுமானம்..! அகற்றுவதற்கு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கில் சீன எழுத்துக்களுடன் கூடிய கட்டுமானம்..! அகற்றுவதற்கு நடவடிக்கை..

யாழ்.வடமராட்சி கிழக்கு - வத்திராயன் பகுதியில் தனியார் ஒருவரினால் அமைக்கப்பட்டிருக்கும் சிறுவர் பூங்காவில் உள்ள சீன எழுத்துக்கள் அகற்றப்படவுள்ளதாகவும் அதற்காக பிரதேச செயலர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. 

குறித்த சிறுவர் பூங்காவில் சீன மொழியில் எழுதப்பட்டிருக்கும் எழுத்தக்களுடன் கூடிய வரவேற்பு வளைவு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த கட்டுமானத்தை கட்டியவர் இவ்வாறான ஒரு கட்டமானத்தை விரும்பவில்லை. ஆனால் கட்டியவர்கள் அதில் சீன மொழியில் எழுத்துக்களை எழுதியுள்ளனர்.  அவர் சீனமொழியை பயன்படுத்துமாறு கூறவில்லை என அறியமுடிகிறது.

இந்நிலையில் சீன எழுத்தினை அகற்ற பிரதேச செயலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு