இந்த நிலைமையில் ஐ.பி.எல் தேவையா? -கேள்வி எழுப்பும் ஆடம் கில்கிறிஸ்ட்-

ஆசிரியர் - Editor II
இந்த நிலைமையில் ஐ.பி.எல் தேவையா? -கேள்வி எழுப்பும் ஆடம் கில்கிறிஸ்ட்-

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் ஐ.பி.எல் தொடரை ஏன் தொடர்ந்து நடத்த வேண்டும் என அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில்:- 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இந்தியர்களுக்காக தாம் பிரார்த்திப்பதாகவும், கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகுந்த பயத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் பொருத்தமற்றது இல்லையா? என்றும், மக்களைத் தொற்றில் இருந்து திசைதிருப்பவே போட்டிகள் நடத்தப்படுகிறதா? என்றும் ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு