மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம்!! -தவறுதலாக மைதானத்திற்குள் நுழைந்த நாய் வெற்றியாளராக அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம்!! -தவறுதலாக மைதானத்திற்குள் நுழைந்த நாய் வெற்றியாளராக அறிவிப்பு-

அமெரிக்காவில் பாடசாலை மாணவர்களுக்கு இடையே நடந்த ஓட்டப் போட்டியின் குறுக்கே ஓடி வந்த நாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அந்நாட்டின் உட்டா மாகாணத்தில் உள்ள லோகன் என்ற இடத்தில் இயங்கிவரும் பாடசாலை பள்ளி ஒன்றில் ஓட்டப்பந்தயப் போட்டிகள் நடந்தன.

இதன் போது மாணவர்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக் கொண்டிருந்த போது பார்வையாளர் பகுதியிலிருந்து நாய் ஒன்று குறுக்கே வந்தது.

பந்தயத்தில் பங்கேற்ற மாணவிகளுக்கு நடுவே அந்த நாயும் வெறித்தனமாக ஓடத் தொடங்கியது. இதனைக் கண்ட பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

எல்லைக் கோட்டுக்கு அருகே வந்த போது மாணவியை விட ஒரு வினாடி முந்திச் சென்று அந்த நாய் வெற்றி பெற்றதாக விளையாட்டாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு