ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய அஸ்வின்!!

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய அஸ்வின்!!

2021, ஐ.பி.எல் ரி-20 தொடரிலிருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர் அஸ்வின் விலகுவதாக அறிவித்துள்ளார். 

கொரோனா பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் ஜ.பி.எல் தொடரிலிருந்து விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். ஒரு வேளை சூழல் நல்லபடியாக மாறினால், நான் அணிக்குள் மீண்டும் வருவேன் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அஸ்வின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

2021 ஐ.பி.எல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொரோனா வைரசிற்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம். அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் சேர்வேன் என எதிர்பார்க்கிறேன் எனப்பதிவிட்டுள்ளார். 

இந்த கடினமான தருணத்தில் அஸிவினுக்கு முழு ஆதரவு அளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகமும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு