வடமாகணத்தில் மே 03ம் திகதி தொடக்கம் தடுப்பூசி..! மாகாணத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டக்குள் என்கிறார் பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I
வடமாகணத்தில் மே 03ம் திகதி தொடக்கம் தடுப்பூசி..! மாகாணத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டக்குள் என்கிறார் பணிப்பாளர்..

வடமாகாணத்தில் 2ம் கட்ட தடுப்பூசி மே மாதம் 3ம் திகதி தொடக்ம் 10 திகதிவரை வழங்கப்படும். என மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ்.மாவட்டத்தின் சுகாதார நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இன்றைய தினம் மாவட்ட கொவிட் 19 செயலணி கூறியிருந்தது. கூட்டத்தின்போதே பணிப்பாளர் மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடமாகாணத்தை பொறுத்தவரைக்கும் தற்போது கொரோனா நிலைமையானது தீவிரமடைந்து இருந்தாலும் பூரண கட்டுப்பாட்டில் இருக்கின்றது. 

எனினும் அதனை தொடர்ந்து பேணுவதற்கு முப்படையினர் ,சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களின் ஒன்று கூடல்களை தடுப்பதோடு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கான 

ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டதோடுஏற்கனவே சுகாதார பிரிவினருக்கு வழங்கப்பட்ட முதலாம் கட்ட தடுப்பூசியின் இரண்டாம் கட்ட தடுப்பூசி 

எதிர்வரும் மே மாதம் 3ஆம் தேதி தொடக்கம் 10ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு