கொரோனாவிலிருந்து மீண்ட அக்சார் பட்டேல்!! -டெல்லி அணியுடன் மீண்டும் இணைந்தார்-

ஆசிரியர் - Editor II
கொரோனாவிலிருந்து மீண்ட அக்சார் பட்டேல்!! -டெல்லி அணியுடன் மீண்டும் இணைந்தார்-

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரும் சகலதுறை ஆட்டக்காரருமான அக்சார் பட்டேல் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். 

அவருக்கு கடந்த 3 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் கொரோனா தொற்றில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளார். 

இதனால் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார். இருந்தாலும் டெல்லி ஆடும் லெவன் அணியில் இணைவதற்கு கூடுதல் நாட்கள் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் ஞாயிற்றுக்கிழமை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. அதன்பின் அகமதாபாத் சென்று நான்கு போட்டிகளில் விளையாடும்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு