யாழ்.பொலிஸ் நிலையத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு..! இன்றும் 11 பொலிஸாருக்கு தொற்று உறுதி, இராணுவ சிப்பாய் ஒருவருக்கும் தொற்று, விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொலிஸ் நிலையத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு..! இன்றும் 11 பொலிஸாருக்கு தொற்று உறுதி, இராணுவ சிப்பாய் ஒருவருக்கும் தொற்று, விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி இன்றைய தினம் 788 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் 11 பேருக்கும், 

கோப்பாய் மற்றும் நல்லுார் பகுதிகளில் இருவருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் இருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும், தொற்று உறுதியானது, 

இவர்களில் மன்னார் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான 5 போில் 4 பேர் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர் தொற்று அறிகுறிகளுடன் மல்லாவி வைத்தியசாலைக்கு சென்ற இராணுவ சிப்பாய் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு