யாழ்.திருநெல்வேலி - பாரதிபுரம் தொடர்ந்தும் முடக்கப்படும் அபாயம்..! இன்றும் 5 பேருக்கு தொற்று உறுதி, விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி - பாரதிபுரம் தொடர்ந்தும் முடக்கப்படும் அபாயம்..! இன்றும் 5 பேருக்கு தொற்று உறுதி, விபரம் வெளியானது..

முடக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி - பாரதிபுரம் கிராமத்தில் மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். 

இன்றைய தினம் 643 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடமாகாணத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன்படி யாழ்.மாவட்டத்தில்  திருநெல்வேலி  - பாரதிபுரம் கிராமத்தில் 5 பேருக்கும், 

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களை சேர்ந்தவர்கள் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு