புதிய பெட்டிகளை இணைத்தக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தது ஸ்ரீ தேவி புகைரதம்..!

ஆசிரியர் - Editor I
புதிய பெட்டிகளை இணைத்தக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தது ஸ்ரீ தேவி புகைரதம்..!

கொழும்பு - காங்கேசன்துறை இடையில் ஸ்ரீதேவி புகைரத சேவையில் புதிய ரயில் பெட்டிகளை இணைத்து நேற்றய தினம் 1வது சேவையை ஆரம்பித்துள்ளது. 

கடந்த மாதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 பெட்டிகள் M11 locomotive இன்ஜினுடன் இணைக்கப்பட்டு சேவையில் ஈடுபடுகின்றன. 

 Air brake system கொண்ட ரயில் பெட்டிகளாகும். இதில் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் மற்றும் 2 ஆம் 3 ஆம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 

நேற்று மதியம் 03.55க்கு புறப்பட்ட இந்த ரயில் காங்கேசன்துறை 22.29 இற்கு வந்து இன்று காலை அதே ரயில் காங்கேசன்துறையில் இருந்து 03.30 க்கு புறப்பட்டு 

யாழ்ப்பாணம் ரயில் நிலையத்துக்கு அதிகாலை 04.00 வந்து கோட்டைக்கு புறப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு