முரளிதரன் சிகிச்சையின் பின் விடுவிப்பு!!

ஆசிரியர் - Editor II
முரளிதரன் சிகிச்சையின் பின் விடுவிப்பு!!

சென்னை -அப்பலோ மருத்துவமனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட இலங்கை அணியின் முன்னாள் கிறிக்கெட் வீரரும் ஐ.பி.எல் தொடரில் ஆடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்றுவிப்பாளருமான முத்தையா முரளிதரன் அஞ்ஜியோ செய்யப்பட்டு இன்று திங்கட்கிழமை வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு வளங்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளித்து அப்பலோ வைத்தியசாலை இன்று திங்கட்கிழமை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முத்தையா முரளிதரன் தனது 49 ஆவது பிறந்த தினத்தை நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு