முதலமைச்சர் எடப்பாடி வைத்தியசாலையில் அனுமதி!! -அறுவைச்சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு-

ஆசிரியர் - Editor II
முதலமைச்சர் எடப்பாடி வைத்தியசாலையில் அனுமதி!! -அறுவைச்சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு-

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிகிச்சைக்காக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு குடல் இறக்க பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவர்களின் ஆலோசனைப்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று பரிசோதனை முன்னதாக செய்யப்பட்டது. அதில் தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு