சமீரா ரெட்டிக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
சமீரா ரெட்டிக்கு கொரோனா!!

நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக  தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அவர் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி பல படங்களில் நடித்துள்ளார். சமீரா ரெட்டிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

நேற்று எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளேன். என் முகத்தில் புன்னகையை வர வைக்க நீங்கள் இருக்குறீர்கள் என்பதை நான் அறிவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு