இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!! -விமான போக்குவரத்தை ரத்துச் செய்த ஹாங்காங்-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!! -விமான போக்குவரத்தை ரத்துச் செய்த ஹாங்காங்-

கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பை அடுத்து நாளை முதல் வரும் மே 3 ஆம் திகதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாளை முதல் வரும் மே 3 ஆம் திகதி தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது. 

மேலும் பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கான விமான சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, மும்பை - ஹாங்காங் இடையேயான விஸ்தரா விமானங்களை மே 2 ஆம் தேதி வரை ஹாங்காங் அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு