உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று..! 5 நாட்களுக்கு பின் கிடைத்த பீ.சி.ஆர் அறிக்கை, மரண சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கு சிக்கல்..

ஆசிரியர் - Editor I
உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று..! 5 நாட்களுக்கு பின் கிடைத்த பீ.சி.ஆர் அறிக்கை, மரண சடங்கில் கலந்துகொண்டவர்களுக்கு சிக்கல்..

ஒட்டுசுட்டான் பகுதியில் உயிரிழந்த ஒருவருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் 5 நாட்களின் பின்னர் கிடைத்த நிலையில் மரண சடங்கில் கலந்து கொண்டிருந்தவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

சின்னச்சாளம்பன் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உயிரிழந்த நபர் ஒருவருக்கு இறப்பின் பின் பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டபோதும் 5 நாட்களுக்கு பின்பே பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது. 

இதனால் மரண சடங்கில் கலந்துகொண்டவர்கள் கண்டறியப்பட்டு உடனடியாக தனிமைப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு பகுதியினருக்கு நேற்றய தினம் பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு