முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் யாழ்.பல்கலைகழகத்தில் திறந்துவைக்கப்படுகிறது..! துணைவேந்தர் திறந்துவைப்பார் என தகவல்..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் யாழ்.பல்கலைகழகத்தில் திறந்துவைக்கப்படுகிறது..! துணைவேந்தர் திறந்துவைப்பார் என தகவல்..

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் மீளவும் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிர்வரும் 23ம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. 

பல்கலைகழக மாணவர்களின் அழைப்பில் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா நினைவு முற்றத்தை திறந்துவைப்பார் என கூறப்படுகிறது. 

பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு முற்றம் பல்கலைகழக நிர்வாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடித்து அழிக்கப்பட்டது. 

இதனை எதிர்த்து பல்வேறு அழுத்தங்களுக்கும் மத்தியில் மாணவர்கள் உணர்ச்சிகரமான போராட்டத்தை நடத்தியிருந்ததன் விளைவாக இடிக்கப்பட்ட நினைவு முற்றம் மீள கட்டமைப்பதற்கு

பல்கலைகழக நிர்வாகம் இணங்கியதுடன், துணைவேந்தர் அடிக்கல் நாட்டிவைத்தார். இதன் பின்னர் பூரணமாக கட்டமைக்கப்பட்ட நினைவு முற்றம் 

இம்மாதம் 23ம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு