யாழ்.திருநெல்வேலி சந்தை சூழலில் தொடரும் கொரோனா ஆபத்து..! 2ம் கட்ட பரிசோதனையில் இன்றும் 11 பேருக்கு தொற்று உறுதி, விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி சந்தை சூழலில் தொடரும் கொரோனா ஆபத்து..! 2ம் கட்ட பரிசோதனையில் இன்றும் 11 பேருக்கு தொற்று உறுதி, விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 13 பேர் உட்பட வடக்கில் இன்று 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 386 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 14 போில் 11 பேர் யாழ்.திருநெல்வேலி சந்தை கடை வியாபாரிகளாவர். 

இவர்களுக்கு 2ம் கட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உடுவில் பகுதியில் ஒருவருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்தவராவார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு