ஜ.பி.எல் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த இந்தியர்!! -டோனியை முந்தினார் ரோகித் சர்மா-

ஆசிரியர் - Editor II
ஜ.பி.எல் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த இந்தியர்!! -டோனியை முந்தினார் ரோகித் சர்மா-

ஐ.பி.எல் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல், பெங்களூரு வீரர் டிவில்லியர்ஸ் ஆகியோருக்கு அடுத்த இடத்தை ரோகித் சர்மா பிடித்துள்ளார்.

ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் தலைவர் ரோகித் 2 சிக்சர் விரட்டினார். இதையடுத்து ஐ.பி.எல் போட்டிகளில் அவரது ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்தது. 

இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர் நொறுக்கிய இந்திய வீரர் என்ற சாதனையை சென்னை அணித் தலைவர் டோனியிடம் இருந்து தட்டிப்பறித்தார். 

ஜ.பி.எல் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் (351 சிக்சர்), பெங்களூரு வீரர் டிவில்லியர்ஸ் (237 சிக்சர்) ஆகியோருக்கு அடுத்த இடத்தை ரோகித் சர்மா பிடித்துள்ளார். மும்பை வீரர் பொல்லார்ட் நேற்று 200 சிக்சர்களை (167 ஆட்டத்தில் 201 சிக்சர்) கடந்தார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு