யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர் உட்பட 10 பேருக்கு தொற்று..! விபரம் வெளியானது, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர் உட்பட 10 பேருக்கு தொற்று..! விபரம் வெளியானது, மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 10 பேர் உட்பட வடமாகாணத்தில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இதன்படி யாழ்.சிறைச்சாலையில் 4 பேருக்கும், பருத்தித்துறை பகுதுியில் 2 பேருக்கும், சண்டிலிப்பாய் பகுதியில் ஒருவருக்கும், தெல்லிப்பழையில் ஒருவருக்கும், உடுவில் பகுதியில் ஒருவருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவருக்கும்

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு