யாழ்.மாவட்டத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், 588 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அதில் யாழ்.மாநகரில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகஸ்த்தர். 

மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரும் பொலிஸ் உத்தியோகஸ்த்தராவார். அதேபோல் சண்டிலிப்பாயில் இருவருக்கும், 

தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு