தலைவி படத்துக்குத் தடை இல்லை!! -உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு-

ஆசிரியர் - Editor II
தலைவி படத்துக்குத் தடை இல்லை!! -உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு-

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்வை பிரதிபலிக்கும் தலைவி படத்துக்குத் தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தலைவி படத்தில் தங்கள் குடும்பத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வழக்கை நீதிபதிகள் விசாணைக்கு எடுத்துக் கொண்டனர். 'தலைவி' என்ற புத்தகத்தின் அடிப்படையிலேயே படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தீபாவிடம் ஒப்புதல் பெறத் தேவையில்லை என்றும் இயக்குநர் விஜய் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

படத்தில் ஜெயலிதாவை சிறந்த முறையிலேயே சித்தரித்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டது. அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில், தலைவி படத்திற்கு மட்டும் இன்றி குயின் வெப் சீரிசுக்கும் தடை விதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், தீபாவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு