கொரோனா தொற்றா? -சாருக்கான் தனிமைப்படுத்தலில்-

ஆசிரியர் - Editor II
கொரோனா தொற்றா? -சாருக்கான் தனிமைப்படுத்தலில்-

பதான் படக்குழுவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நடிகர் சாருக்கான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

பதான் என்ற ஹிந்தி படத்தில் சாருக்கான் நடித்து வருகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு துபாயில் நடந்த நிலையில் தற்போது மும்பையில் அந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். 

பதான் படக்குழுவினருக்கு முன் எச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்ததில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தகவல் அறிந்ததும் சாருக்கான் அதிர்ச்சியடைந்தார். அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். பதான் படத்தில் தீபிகா படுகோனே, ஜான் அபிரகாம் ஆகியோரும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு