கொரோனா தொற்றினால் குருதி விஷமடைவு..! யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு மரணம் பதிவு..

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றினால் குருதி விஷமடைவு..! யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு மரணம் பதிவு..

யாழ்.கரவெட்டி பகுதியை சேர்ந்த 83 வயதான முதியவர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஹோமாகம வைத்தியசாலகயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விடயத்தை  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, கரவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 

83 வயதான ஆண் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதையடுத்து அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணம், கொரோனா தொற்றுடன் உக்கிர குருதி விஷமடைவு, என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு