வடமாகாணம் உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணம் உள்ளிட்ட 5 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் 5 மாகாணங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. 

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் கூறப்பட்டிருப்பதாவது,

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்கள், சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, அனுராதபுரம், மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும், 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு 

பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு